
மித்ரா நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஹலிமா கூறிய பொய்க் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கோரி லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் புகார் செய்யப்படவுள்ளது. எம்ஏபி கட்சியின் தலைவரும் முன்னாள் ஒற்றுமை துறை அமைச்சருமான பொன். வேதமூர்த்தி வரும் 20 ஆம் தேதி மாலை 2.30 மணிக்கு மேல் புத்ரா ஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை இந்திய சமுதாயத்திற்கு சேரவேண்டிய லட்சக்கணக்கான வெள்ளியை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட விவகாரம் தற்போது நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கடந்த வாரத்தில் Genarasi Z Indians என்ற இளைஞர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்தனர்.
