
முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வெளிநாடு செல்லக் கடப்பிதழைத் தற்காலிகமாக விண்ணப்பம் செய்தது தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்காதக் காரணம் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் குழு உட்பட சட்டத்துறை அலுவலகமும் விளக்கமளிக்க வேண்டும் என்று சி4 அமைப்பு வலியுறுத்தி உள்ளது. 4 கோடியே 20 லஞ்சம் வெள்ளி ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு டத்தோஸ்ரீ நஜிப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நஜீப்பை வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அனுமதிப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று சில 4 அறிவித்துள்ளது.
