
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சின்னத்தில் போட்டியிடுவதை ஜசெக தடுக்க கூடாது என்று பெக்கலான் பத்து சட்டமன்ற உறுப்பினர் நூர் இஸாம் கேட்டுக் கொண்டுள்ளார். 2018 இல் நடைபெற்ற தேர்தலில் மலாக்கா மாநில பெக்கலான் பத்துவில் ஜசெக சார்பில் போட்டியிட்ட நூர் இஸாம் வெற்றிபெற்றார். பின்னர் இவர் உட்பட 4 பேர் அணி மாறியதால் மலாக்காவில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி கவிழ்ந்தது. இவர் மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் பக்கம் திரும்பி உள்ளார். இவர் மீண்டும் போட்டியிட ஜசெக வாய்ப்பு வழங்காது என்று ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார். நாங்கள் இவரை கடுமையாக எதிர்க்கிறோம் என்று அவர் சொன்னார்.
