
பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதிகளிடம் அவர் கூறுகையில், ‛தனக்கும் என்.சி.பி. அதிகாரிகளின் சாட்சிகளை கலைக்க பணம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை,’ என்று தெரிவித்துள்ளார். கோவா நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் நடந்த மது விருந்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
