
இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை நிர்வகிக்க சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டுமென்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் வி பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்தியர்கள் நன்மை பயக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும். குறிப்பாக இந்திய சமுதாயத்தின் நிதி விவகாரத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதனை நிர்வகிக்க தனி துறையை அமைக்க வேண்டும். மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரசு சாரா இயக்கங்கள் தனி நிறுவனங்கள் செய்யும் வேலையை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுத்து அதை அரசாங்கமே வழிநடத்த வேண்டும் என பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
