
மலேசியக் கிண்ண கால்பந்து ஆட்டங்கள் வரிசையில் குழுப் பிரிவுகளில் தகுதிச் சற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிவுற்ற வேளையில ,8 அணிகள் காலிறுதி ஆட்டத்திற்குள் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளன. ஏ பிரிவிலிருந்து கே.எல். சிட்டி எப்சி மற்றும் சரவாக் யுனைடெட் எப்சியும் ,பி பிரிவிலிருந்து திரெங்கானு எப்சி மற்றும் சிலாங்கூர் எப்சியும், சி பிரிவிலிருந்து மலாக்கா யுனைடெட் எப்சி மற்றும் கெடா டாருள் அமான் எப்சியும், டி பிரிவிலிருந்து ஜேடிடி எப்சி மற்றும் சபா எப்சி ஆகிய எட்டு அணிகளே காலிறுதி ஆட்டங்களில் களம் காணவுள்ளன. வரும் நவம்பர் 14 -ஆம் தேதி காலிறுதி ஆட்டங்களின் முதல் சுற்றும்,நவம்பர் 18 -ஆம் தேதி இரண்டாவது சுற்று ஆட்டங்களும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



