
தேசிய முன்னணி காலம் முடிவடைந்து விட்டது என்ற பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறியிருப்பது வருத்தம் மற்றும் அவமானமாகும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி கடுமையாக சாடியுள்ளார். முன்பு தேசிய முன்னணி அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பயன்படுத்தி அரசியலில் பெயர் பதித்த இவர் செய்கையை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இதில் எப்படியிருப்பினும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பேசுவது அவரைப் பொறுத்தது. காரணம் விசுவானமான ஆதரவாளர்கள் தேசிய முன்னணி போராட்டத்தை நன்கு உணர்ந்திருப்பர்கள். முன்பு எங்கள் ஆதரவு தேவைப்பட்டது.இப்போது தேசிய முன்னணியை இழிவாக பார்ப்பதா என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
