
அரசு மற்றும் எதிர்கட்சிக் கூட்டணிகளுடன் செய்துக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறு ஆய்வுச் செய்யப் பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பக்கத்தான் தலைவர்கள் சந்திக்க விரும்புவதாக ஜசெக தலைமைச் செயலாளர், லிம் குவான் எங் தெரிவித்தார். இதன் முக்கியக் காரணம் நேற்று மக்களவையில் முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு வழங்கப்படும் சொத்துடமை விவகாரம் குறித்து மக்களவையில் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் குறிப்பிட்டார். இதுகுறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மாட் சாபு ஆகியோருடன் நான் கலந்து பேசியதில் மத்திய அரசுடன் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கேற்ப இது இல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால் இவ்விவகாரம் குறித்துப் பிரதமருடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடுச் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்றார்.
