
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் 10 கோடி வெள்ளி மதிப்புள்ள வீடு, நிலம், சொத்தை வெகுமதி யாக கோரி அரசாங்கத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார். நேற்று முன்தினம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் இதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக தெரிவித்தபோது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட பக்கத்தான் ஹரப்பான் எம்பிக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த விண்ணப்பத்தை மீட்டுக் கொள்வதாக நேற்று டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். தனது விண்ணப்பம் மீட்டுக்கொள்ள படுவதற்கும் மலாக்கா தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் சொன்னார்.
