
கெடா மாநிலத்தில் நான்கு இலக்கு லைசென்ஸ் ரத்து செய்திருக்கும் கெடா மாநில அரசுக்கு எதிராக மக்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
ஜசெக சட்ட பிரிவு தலைவரும் பிரபல வழக்கறிஞருமான ராம் கர்பால் சிங் இந்த வழக்கில் மக்கள் சார்பில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு இலக்கு கடைகளின் லைசென்ஸ் புதுப்பிக்கப்படாது என்று கெடா மாநில அரசாங்கம் எடுத்துள்ள முடிவு கூட்டரசு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று ராம் கர்பால் சிங் சுட்டிக்காட்டினார்.
