
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்களும் சொந்தமாக தடுப்பூசியை வாங்கிக் கொள்வதற்கு எந்த தடையுமில்லை என்று அறிவியல் புத்தகத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
தேசிய தடுப்பூசி திட்டத்திற்காக புத்ரா ஜெயா வாங்கிய தடுப்பூசி நிறுவனங்களிலிருந்து சிலாங்கூர் உட்பட சில மாநிலங்களும் இந்த தடுப்பூசி மருந்தை வாங்கி உள்ளன. தேசிய தடுப்பூசி திட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்கு இது அவசியமாகிறது என்றார் அவர்.
