
கிழக்கு பருவமழை காற்றால் அடுத்தாண்டு கொண்டாடப்படும் சீன புத்தாண்டு வரை நாட்டில் காய்கறிகள் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயரலாம் என்று கோலாலம்பூர் காய்கறிகள் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் கேமரன் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் காய்கறி தோட்டங்கள் அழிந்தன. இதனால் நாட்டில் காய்கறிகளின் விலை தற்போது மிகப் பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. காய்கறித் தோட்டங்களில் வேலை செய்ய அந்நிய தொழிலாளர்களும் இல்லை என்பதால் காய்கறிகளின் உற்பத்தி குறைக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு பருவமழையும் காய்கறி உற்பத்திக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது


