
ம இகா கட்சி தேர்தலில் ஜாதி அரசியல் நடத்துவோர் நீக்கப்படுவார்கள் என்று ம இகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கடுமையாக எச்சரித்துள்ளார். கட்சி தேர்தலின் போது இதுபோன்று நடப்பது வழக்கமாகி விட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக புகார்கள் செய்யப்படவில்லை. இருந்தாலும் சிலர் ஜாதி அரசியலை நடத்துவதை மறக்க முடியாது. வாக்குகளுக்காக ஜாதி அரசியலை நடத்துபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அவர் எச்சரித்தார்.
