
நாட்டில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 21.4 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 65,623 புகார்கள் மட்டுமே பதிவானது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 83,456 ஆக இருந்தது. இந்த குற்றச்செயல் எண்ணிக்கை குறைவுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கமும் ஒரு காரணமாக இருந்ததாக தேசிய புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மாஹிடின் தெரிவித்தார். இந்த குற்றச்செயல்களில் பலாத்காரம் சம்பந்தப்பட்ட குற்றங்களும் சொத்துடைமை குற்றங்களும் அடங்கும் என அவர் கூறினார்.
