
கடந்த ஆண்டு மதிப்பு மிக்க அவையில் சிலாங்கூர் மாநில பட்ஜெட்டை நான் சமர்ப்பித்தபோது, கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பில் உலகம் முழுவதும் மூழ்கி இருந்தது. பார்வைக்கு இது முடிவே இல்லாதது போன்று இருந்தது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2022 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது குறிப்பிட்டார். அந்த நேரத்தில், கோவிட்-19 தடுப்பூசியை இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரித்து உலகின் பெரும்பாலான சமூகங்களும், நாடும் பெறுமா? அதனை நாம் சிலாங்கூர் மாநிலத்திற்கு வழங்க முடியும் என்று கூட நினைக்கவில்லை என்று அவர் சொன்னார். ஆகவே 2022 இல் சவாலை படிப்பினையாக கொண்டு முன்னேறுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
