
நாட்டில் இதுவரை 2 கோடியே 26 லட்சத்து 65 ஆயிரத்து 493 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 கோடியே 30 லட்சத்து 10 ஆயிரத்து 447 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 12 முதல் 17 வயது வரையிலான 27 லட்சத்து 5 ஆயிரத்து 253 இளையோர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 19 ஆயிரத்து 774 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
