
கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் நேற்று வரை பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை 85 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 10,060 பள்ளிகளில் பயிலும் 43 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களை இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது என்று கல்வி மூத்த அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின் தெரிவித்தார். பள்ளிகள் மறுபடியும் திறக்கப்பட்டதை பெற்றோர்களும் மாணவர்களும் பொதுவாக வரவேற்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
