
பொதுத்தேர்தல் 18 வயதினர் வாக்களிக்கும் உரிமை டிசம்பர் 18 ஆம் தேதி அமலுக்கு வருகிறது என்று அரசாங்கம் தேதியை நிர்ணயித்துள்ளது. இதை அமுல் படுத்தும் உத்தரவில் அரசாங்க தலைமை செயலாளர் முகமட் ஸூக்கி கையெழுத்திடுவார். அதன் மூலம் பொதுத்தேர்தலில் 18 வயதினர் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் வேளையில் மூன்று தினங்களுக்கு முன்னர் 18 வயதினர் வாக்களிக்கும் உரிமை நடிப்புக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
