28.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

சிலாங்கூர் புத்தக விழா மக்களிடையே அமோக ஆதரவு!

சிலாங்கூர் புத்தக விழா ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த விழாவின் முதல் நாளில் 1,500 க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்துள்ளனர். நேற்று பிற்பகல் 2.00 மணி வரை இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக சிலாங்கூர் பொது கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது கூறினார். இந்த புத்தக விழா 16 வது ஆண்டாக நடத்தப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு வருமானம் ஈட்டுவதற்காக இங்கு வியாபாரம் புரிகின்றவர்கள் மற்றும் கண்காட்சிக் கூடங்களை அமைத்து உள்ளவர்களுக்கு உதவும் வகையில் மேலும் அதிகமானோர் இந்த கண்காட்சிக்கு வருகை தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles