
நாட்டில் ஏற்றம் கண்ட் உள்ள பொருட்களின் விலையை கண்டித்து தலைநகரில் நடத்த திட்டமிடப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூர் சோகோ பேரங்காடி முன் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த மூன்று கோரிக்கைகள் கொண்ட குழு திட்டமிட்டது. ஆனால் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் அறிவுரைக்கு பின்னர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். நாட்டில் தற்போது காய்கறிகள், கோழி, முட்டைகள் உட்பட அனைத்து பொருட்களின் விலை மிகப் பெரிய அளவில் ஏற்றம் கண்டிருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
