
பார்ட்டி சரவா பெர்சத்து எனப்படும் பிஎஸ்பி கட்சியுடன் பேச்சுவார்த்தை தோல்வியுற்றதைத் தொடர்ந்து டூடோங், பாவான் ஆசான் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக சரவாக் மாநில ஜசெக தலைவர் சோங் சியென் ஜென் தெரிவித்தார். இப்போது வரை சரவா மாநிலத் தேர்தலுக்கானத் தொகுதிப் பங்கீட்டுக்கு ஒத்துழைப்புக் குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இது குறித்து நீண்ட நேரம் விவாதித்தப் பின்னர் டூடோங் மற்றும் பாவாங் ஆசான் சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த நாங்கள் முடிவுச் செய்து விட்டோம் என்றார்.
