
போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியப் பிரஜை நாகேந்திரன் கே.தர்மலிங்கத்திற்கு சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பெற்றுள்ளார் என்று சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்தார். நாகேந்திரனின் தண்டனையைக் குறைக்குமாறு கோரி, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அனுப்பிய கடிதத்திற்குப் பதிலளித்து சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் இவ்வாறு பதில் அளித்துள்ளார்
