
வரும் 2034 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஏற்று நடத்தும் ஆற்றல் ஆசியான் நாடுகளுக்கு இருப்பதாக ஃபீபா தலைவர் ஜியானி இன்பந்தினோ தெரிவித்தார். சிங்கப்பூர் நாட்டில் புதுப்பிக்கப்பட்ட புதிய அரங்கத்தை பார்வையிட்ட பின்னர் அவர் இதை தெரிவித்தார். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெறுகிறது. 2022 ஆம் ஆண்டில் கட்டார் உலகக் கிண்ண போட்டியை ஏற்று நடத்துகிறது. அந்த வகையில் வரும் 2034 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணப் போட்டியை ஆசியான் நாடுகள் ஏற்று நடத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் சொன்னார்.
