
சரவாக் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு சூரிய கதீர் கருவிகள் பொருத்தும் திட்டத்தில் 18 கோடியே 75 லஞ்சம் வெள்ளியை லஞ்சமாக கோரியதாக தம் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் தாக்கல் செய்த மனுவை இன்று புத்ரா ஜெயா வில் உள்ள அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி ஹனிபா தலைமையிலான நீதிபதிகள் எம். குணாளன், ஹஸிம் ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழு ரோஸ்மாவின் மனுவை ஏக மனதாக தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
