
இனி வரும் பெருந்தொற்றுகள் கரோனாவைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று தடுப்பூசி தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் கூறுகையில் எதிர்காலங்களில் வரும் பெருந்தொற்றுகள் கரோனாவைவிட மிகவும் ஆபத்தமானதாக இருக்கும் என்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகில் கரோனா தொற்று அறியப்பட்டது. இதுவரை கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 50 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கும் மேலானோர் உயிரிழந்தனர். கோரோனாவால் உலகளவில் பல கோடி டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்களின் வாழ்க்கை தலைகீழாக சரிந்துள்ளது. இந்நிலையில், எதிர்காலங்களில் வரும் பெருந்தொற்றுகள் கரோனாவைவிட மிகவும் ஆபத்தமானதாக இருக்கும் என்று எச்சரித்தார்.
