
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி நிதி மோசடிக் குற்றச்சாட்டுத் தொடர்பில் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு உயர் நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டு நீதிமன்றமும் வழங்கியத் தீர்ப்புகளைப் பார்க்கும் போது அவர் குற்றம் புரிந்திருப்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். இருந்த போதிலும் கூட்டரசு நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு முடிவுக்குக் காத்திருக்க நஜிப்புக்கு தண்டனை அனுபவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது தொடர்பில் எனக்கு மன நிறைவளிக்கவில்லை. இந்த தண்டனை ஒத்தி வைப்பு உண்மையில் ஓர் உலக சாதனையாகக் கருதப்படுகிறது. அவர் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து விட்டார் என்பதால் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


