
நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 26 ஆயிரத்து 684 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 28 லட்சத்து 33 ஆயிரத்து 870 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள பெரியவர்களில் 2 கோடியே 27 லட்சத்து 34 ஆயிரத்து 488 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 2 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரத்து 8 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
