
செல்வேக்ஸ் திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளை உற்பத்தியாளர்கள் உத்தரவாதம் அளித்துள்ளபடி கொள்முதல் செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும் என சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்நோக்கும் இதர மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கும் இந்த தடுப்பூசியை விற்க முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். எனினும், தற்போதைக்கு செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் ஊக்கத் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.
