
அமெரிக்காவில் பாம்புத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்காக 14 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை உரிமையாளர் ஒருவர் தீ வைத்து கொளுத்தும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாஷிங்டன் டிசி அருகே Poolesville பகுதியில் அமைந்துள்ள தன் வீட்டை இவர் கொளுத்திய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது வீட்டில் அடிக்கடி பாம்புகள் அழையா விருந்தாளியாய் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பாம்பு நடமாட்டத்தை தடுக்கும் வகையில் 14 கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொந்த வீட்டையே தீ வைத்து கொளுத்தும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
