
ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் அதன் எல்லையில் ரஷ்யா தன் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருகிறது. உக்ரைனின் கிரீமியா பகுதியை ஏற்கனவே ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந் நிலையில், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்து வருகிறது என்பதால் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று ரஷ்யா அதிபர் புடின் தெரிவித்தார்.
