
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அண்மையில் நடைபெற்ற அனைத்துலக காது கேளாதவர்கள் கராத்தே போட்டியில் பங்கேற்ற ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த இளமாறன் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் இவரும் பயிற்சியாளர் விக்னேஸ்வரன் மற்றும் மலேசிய குழுவினரும் பங்கேற்க கூலாய நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் உதவிகள் வழங்கி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் பங்கேற்ற உலக வீரர்கள் மத்தியில் இளமாறன் வெண்கலப் பதக்கம் வென்றது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று தியோ நீ சிங் தெரிவித்தார்.
