
நாட்டில் தேவைக்கேற்ப வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகள் தற்காலிகமானதே என்று உள்நாட்டு பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலேக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். விலையைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக கோழிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் மக்கள் குறைந்த விலையில் கோழி இறைச்சியை வாங்க இது உதவும் என்று அவர் சொன்னார். மலேசிய குடும்பத்திற்கு ஏற்ப கோழி உட்பட பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
