
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைவரும் உரத்த குரலில் கண்டிக்க வேண்டும் என மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான டத்தோ அம்பிகா சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார். தெரிவித்துள்ளார். குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகளை மீறும் சூதாட்டம் மற்றும் மது விற்பனையை தடை செய்வது தொடர்பான கொள்கைகளை அவர்கள் நிராகரிக்கும் நேரம் இது என்று டத்தோ அம்பிகா சீனிவாசன் சுட்டிக்காட்டினார். இந்த கொள்கை முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகளை மட்டுப்படுத்துகிறது என்பதை அரசாங்கம் அறிந்திருந்தாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என்றார்.. ஆகவே தங்கள் உரிமைகள் மறுக்கப்படும் போது இவர்கள் துணிந்து குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
