
இந்தியாவை சக்திவாய்ந்த மற்றும் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 8 ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நமது வீரர்கள் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மரணம், ஒவ்வொரு தேசபக்தர்களுக்கு ஏற்பட்ட இழப்பு. நாட்டின் ஆயுதப்படையை தன்னிறைவு பெற, கடினமாகவும் தைரியமாகவும் உழைத்தார். இதற்கான பலனை நாம் பார்க்கிறோம். ராணுவ வீரர் என்பவர், ராணுவத்தில் பணிபுரியும்போது மட்டும் வீரராக இருப்பது கிடையாது. அவரது வாழ்க்கை முழுவதும் வீரராக வாழ்கிறார். பிபின் ராவத், நாட்டின் ஒவ்வொரு தருணத்திலும் பெருமை மிக்கவராக திகழ்கிறார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
