
மஇகாவின் 78 ஆவது பொதுப் பேரவை இன்று நடைபெறுகிறது. மதியம் 2.00 மணிக்கு இந்த மாநாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார். ம.இ.காவிற்கு அரசாங்கத்தில் துணை அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தனது தலைமை உரையில் இந்த அறிவிப்பை செய்வார் என்று ம இகா வட்டாரத்தில் எதிர்பார்க்கபடுகிறது. மேலும் பிரதமர் இன்று சில முக்கிய அறிவிப்புகளை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
