
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று 95 தமிம்ப்பள்ளிகளுக்கு 49 லட்சம் வெள்ளி நேரடியாக வழங்கப்பட்டது. பத்துமலை தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் ஆகியோர் எடுத்து வழங்கினார். இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் நேற்று 49 லட்சம் வெள்ளி தமிழ்ப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
