
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் நேர்மையான முறையில் வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில அரசு ஆண்டுதோறும் 50 லட்சம் வெள்ளியை தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கு கோடிக்கணக்கான வெற்றியை வழங்கி இருப்பதாக அவர் சொன்னார். அந்த வகையில் அடுத்த ஆண்டிலும் 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது. மேலும் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் நேர்மையான முறையில் வழங்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
