
சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜிபிஎஸ் தலைவர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி தனது இடைக்கால முதல்வர் பதவியை பிரச்சாரத்தில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த சரவாக் முன்னாள் அமைச்சர்களுக்கும் அரசு பதவிகளை பயன் படுத்தக்கூடாது. திட்ட அறிவிப்புகள் அல்லது ஒதுக்கீடுகள், அரசு நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் எந்தவொரு திட்டத்திற்கும் மாநில அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் பிரச்சாரம் செய்ய அபாங் ஜோஹாரி பதவியைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பெர்சே அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
