
காசி உணர்வுகளால் உருவாக்கப்பட்டது. இங்கு வந்து பலரும் ஆசி பெற்றும் இந்த புண்ணியஸ்தலம் இந்தியாவின் அடையாளமாக திகழ்கிறது. காசியின் வளர்ச்சியில் அனைவரது பங்கும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோயிலில் நடந்த விழாவில் பேசுகையில் குறிப்பிட்டார். புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை நேற்று பிரதமர் மோடி திறந்த வைத்தார். காணாமல் போன கோவில்கள் மீண்டும் இங்கு நிறுவப்பட்டன. இந்த நிகழ்வு வரலாற்றில் புதிய அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் ஒரு பிரமாண்டமானது மட்டுமல்ல, இந்தியாவின் சனாதன கலாசாரம் மற்றும் மரபுகளின் சின்னமாகும் என்று அவர் வர்ணித்தார்.
