
2020 ஆம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதுக்கு சைக்கிளோட்ட வீரர் முகமட் அஸிஸூல் மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதுக்கு நீச்சல் வீராங்கனை பெண்டேலா ரினோங் ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பல அனைத்துலகப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த இவர்கள் இருவரும் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டின் சிறந்த பேறு குறைந்தவர் விருதுக்கு வில்வித்தை வீரர் எஸ். சுரேஷ், எடைத்தூக்குதல் வீரர் கஸ்டின் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுன. வரும் டிசம்பர் 21 ஆம் தேதி சுபாங் ஜெயா தங்கும் விடுதியில் நடைபெறும் விழாவில் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனை ஆகியோருக்கு விருதுகள்,20,000 வெள்ளி ரொக்கம் வழங்கப்படுகிறது.
