
நாட்டில் காய்கறிகள் மற்றும் பொருட்கள் விலை உயர்வுக்கு என்ன காரணம். ஏன் பொருட்களின் விலை கட்டுப்படுத்த வில்லை என்று கோரி சட்டமன்ற உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் அரபாட் நேற்று உரித்த கோழியை பேரா மாநில சட்டமன்ற கூட்டத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது யாரும் ஆடு அல்லது மாட்டை கொண்டு வந்து விடப்போகிறீர்கள் என்று சபாநாயகர் முகமட் சாஹிர் குறிப்பிட்டார். நேற்று நடந்த சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று அவர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்
