
லெபனான் – இஸ்ரேல் மோதல் சூழலில், நிலையற்ற போர்நிறுத்தத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க லெபனான் முயற்சி செய்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமைதி பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்.
பரந்த பிராந்திய பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு இணங்க வைப்பதில் சவால்களை சந்தித்து வரும் அமெரிக்கா, லெபனான் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் லெபனானில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் நடைபெறவிருந்த இந்த பேச்சுவார்த்தைகள், பின்னர் வெள்ளை மாளிகைக்கு மாற்றப்பட்டன.
“இரு நாடுகளின் பிரதிநிதிகளும் வந்தவுடன், அதிபர் டிரம்ப் அவர்களை நேரடியாக வரவேற்பார்,” என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை,
லெபனான் அரசாங்கத்துடன் பெரிய கருத்து வேறுபாடுகள் இல்லை என தெரிவித்த இஸ்ரேல்,
பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காத ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என லெபனான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றன.
