
உலகையே உலுக்கிய வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உலகின் முதல் பலி, இங்கிலாந்தில் நேற்று முன்தினம் பதிவாகி இருக்கிறது. இதற்கு மத்தியில் உலகமெங்கும் ஒமிக்ரோன் தொற்று பரவி வருகிறது. இந்த வைரசால் ஆஸ்பத்திரி சேர்க்கைகளும், இறப்புகளும் அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இனி வரும் வாரங்களில் இந்த வைரசின் தீவிரத்தன்மை பற்றிய கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் நிபுணர்கள் கூறி உள்ளனர். முன் கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் உயிர் பழி அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
