
நாட்டில் பொருட்களின் விலை உயர்வு ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று மலாக்கா மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் பிரசாத் குமார் கேட்டுக் கொண்டார். உயர்வு கண்ட பொருளின் விலை எந்தக் காலத்திலும் இறங்கியதாக வரலாறு இல்லை. தற்போது நோய்த்தொற்று தாக்கத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது தான் பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் பொருட்கள் விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.
