
பசுவை பற்றி பேசுவதையும், பசுவின் சாணத்தை பற்றி பேசுவதையும் குற்றமாக்கியுள்ளனர். பசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம், எங்களுக்கு பசு ஒரு தாய் போன்றது என்று இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். உத்திர பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் 870 கோடி ரூபாய் மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நாளை நாடு ‘விவசாயிகள் தினமாக’ கொண்டாடுகிறது. பால்வளத்துறையை வலுப்படுத்துவது நமது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கிறது. அது தொடர்பான திட்டத்திற்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்ட அவர், பசு எங்களுக்கு தாய் போன்றது என்று கூறினார்
