
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்ற கேள்விக்கு அன்றும், இன்றும், என்றும் பதிலாக திகழ்பவர் எம்.ஜி.ஆர். மட்டும்தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நம்மை விட்டு பிரிந்து இன்றுடன் 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்றைய தலைமுறையினரும் அவருடைய புகழ் பாடுகிறார்கள் என்றால், மற்ற தலைவர்களிடம் இல்லாத தனித்தன்மை எம்.ஜி.ஆரிடம் நிரம்பியிருப்பதுதான் காரணம். 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவராக அவர் இன்னமும் விளங்கி கொண்டிருக்கிறார். இதனிடையே பகுத்தறிவு தந்தை என்று போற்றப்படும் தந்தை ஈ.வே. இராமசாமி கடந்த 24.12.1973ஆம் ஆண்டில் தனது 94ஆவது வயதில் காலமானார். தந்தை பெரியார் மற்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
