
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் மலாக்காவில் பல இடங்களில் வெள்ளம் ஏறியது. இதில் ரெம்பியா என்ற இடத்தில் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மலாக்கா மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் பிரசாத் குமார் மற்றும் அலோர் காஜா கெஅடிலான் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் அஸ்வான் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
