
தலைநகரில் வெள்ளம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த நீர் குளம் தேக்க நிலங்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியது யார் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் கேள்வி எழுப்பியுள்ளார். தாமான் டேசாவில் உள்ள நீர் குளம் தேக்க நிலம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி மேம்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது பக்கத்தான் ஹரப்பான் சார்பில் விலாயா மாநில அமைச்சராக டத்தோஸ்ரீ காலிட் சமாட் 2018 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி தான் பதவியேற்றார். ஆகையால் இந்த நிலம் மேம்பாட்டு திட்டத்திற்கு வழங்கப்பட்டதில் பக்கத்தான் ஹரப்பான் அரசுக்கு சம்பந்தம் இல்லை. அப்படி என்றால் ஆறு நீர் குளம் தேக்க நிலங்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு இது யார் என்று அவர் கேள்வியை எழுப்பியுள்ளார்.
