
இயற்கை பேரிடருக்காக சந்தா பணத்தை மீட்பதற்கு சட்டம் அனுமதி வழங்கவில்லை என்று இபிஎஃப் எனப்படும் ஊழியர் சேம நிதி வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஓய்வு காலத்தில் தங்களது சேமிப்பை பாதுகாக்கும் பொறுப்பை ஊழியர் சேம நிதி வாரியம் ஏற்றுள்ளது. ஓய்வு காலத்தில் 70 விழுக்காடு சேமிப்பும் இதர காரணங்களுக்காக 40 விழுக்காடு சேமிப்பும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பேரிடருக்காக சந்தா பணத்தை மீட்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
