
ஜொகூர் தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய லோங் டைகர் எனப்படும் ரோஹிங்யா ஆடவர் நேற்று கெடா மாநிலத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி தெரிவித்தார். கெடா சுங்கை பட்டாணியில் வீடு ஒன்றில் இவர் கைது செய்யப்பட்டார். இவர் தலைமறைவாகுவதற்கு உதவிய தனிநபர்களும் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார்.
